கினிகத்தேனை பிரதேசத்தில் வீடொன்றில் தாயும் மகளும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
கினிகத்தேனை பெரகஹமுல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய மஹமதிலகே பிரதீபா இந்திராணி என்ற தாயும் 30 வயதுடைய அவரது மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பல நாட்களாக வீட்டில் வசித்தவர்கள் வெளியே வராத நிலையில், வீட்டின் திசையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக குடியிருப்பாளர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய கினிகத்தேனை காவல்துறையினர் இன்று (09) வீட்டை சோதனையிட்டுள்ளனர்.
அதன்படி, இறந்த நிலையில் படுக்கையறையில் இருவரின் உடல்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
உயிரிழந்த இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எனவும், உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் மகன் கொழும்பில் பணிபுரிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாயும் மகளும் மர்மமான முறையில் உயிரிழப்பு - விசாரணையை தீவிரப்படுத்தும் காவல்துறை கினிகத்தேனை பிரதேசத்தில் வீடொன்றில் தாயும் மகளும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.கினிகத்தேனை பெரகஹமுல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய மஹமதிலகே பிரதீபா இந்திராணி என்ற தாயும் 30 வயதுடைய அவரது மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பல நாட்களாக வீட்டில் வசித்தவர்கள் வெளியே வராத நிலையில், வீட்டின் திசையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக குடியிருப்பாளர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய கினிகத்தேனை காவல்துறையினர் இன்று (09) வீட்டை சோதனையிட்டுள்ளனர்.அதன்படி, இறந்த நிலையில் படுக்கையறையில் இருவரின் உடல்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.உயிரிழந்த இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எனவும், உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் மகன் கொழும்பில் பணிபுரிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.