யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் நேற்று (03) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் காரைநகர் – கருங்காலி பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய குமாரன் மகேந்திரலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கருங்காலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் மீது அதே வீதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
விபத்தையடுத்து முதியவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாததால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவரது சடலம் காரைநகர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதற்கிடையில், மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் பலத்த காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முதியவரை மோதிக்கொன்ற மோட்டார் சைக்கிள் - அதிவேகத்தால் யாழில் துயரம் யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் நேற்று (03) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் காரைநகர் – கருங்காலி பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய குமாரன் மகேந்திரலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கருங்காலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் மீது அதே வீதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.விபத்தையடுத்து முதியவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாததால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவரது சடலம் காரைநகர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.இதற்கிடையில், மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் பலத்த காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.