• Apr 20 2026

QR இன்றி எரிபொருள் வழங்க 3,000 ரூபா - சபையில் அம்பலப்படுத்திய எம்.பி.

Chithra / Mar 19th 2026, 8:41 pm
image


கியூ.ஆர். குறியீடு இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வாகன உரிமையாளர் ஒருவரிடம் 3,000 ரூபா பணம் கோரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.டி.சூரியபண்டார சுட்டிக்காட்டினார். 


இந்த முறைகேடு குறித்து இன்று (19)  அவர் நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.


திம்பிரிகஸ்யாய பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  


இதற்குப் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை  ஒப்புக்கொண்டார்.


எனினும், கியூ.ஆர். குறியீடு தொடர்பான அனைத்து தொழில்நுட்பப் பிரச்சினைகளும் தற்போது தீர்க்கப்பட்டு வருவதால், இன்றைய தினத்திலிருந்து இவ்வாறான மோசடிகளுக்கு இடமிருக்காது என அவர் உறுதியளித்தார்.


கியூ.ஆர். முறைமை முழுமையாகச் சீரடைந்தவுடன், இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

QR இன்றி எரிபொருள் வழங்க 3,000 ரூபா - சபையில் அம்பலப்படுத்திய எம்.பி. கியூ.ஆர். குறியீடு இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வாகன உரிமையாளர் ஒருவரிடம் 3,000 ரூபா பணம் கோரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.டி.சூரியபண்டார சுட்டிக்காட்டினார். இந்த முறைகேடு குறித்து இன்று (19)  அவர் நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.திம்பிரிகஸ்யாய பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  இதற்குப் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை  ஒப்புக்கொண்டார்.எனினும், கியூ.ஆர். குறியீடு தொடர்பான அனைத்து தொழில்நுட்பப் பிரச்சினைகளும் தற்போது தீர்க்கப்பட்டு வருவதால், இன்றைய தினத்திலிருந்து இவ்வாறான மோசடிகளுக்கு இடமிருக்காது என அவர் உறுதியளித்தார்.கியூ.ஆர். முறைமை முழுமையாகச் சீரடைந்தவுடன், இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement