• Sep 21 2024

கெஹலியவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு படையெடுத்த எம்.பி கள்...!samugammedia

Sharmi / Jan 12th 2024, 1:25 pm
image

Advertisement

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று  இன்றையதினம் (12) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

காவிந்த ஜயவர்தன, இந்துனில் திஸாநாயக்க, முஜுபர் ரஹ்மான் மற்றும் வசந்த பண்டார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முஜுபர் ரஹ்மான், 

மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மனித இம்யூனோகுளோபுலின் என்ற சர்ச்சைக்குரிய மருந்தை இறக்குமதி செய்ததன் பின்னணியில் கெஹலிய ரம்புக்வெல்ல இருப்பதாக தெரிவித்தார்.

இதுவரையில் அவரை கைது செய்யாமை தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கெஹலியவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு படையெடுத்த எம்.பி கள்.samugammedia கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று  இன்றையதினம் (12) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.காவிந்த ஜயவர்தன, இந்துனில் திஸாநாயக்க, முஜுபர் ரஹ்மான் மற்றும் வசந்த பண்டார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.முறைப்பாட்டை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முஜுபர் ரஹ்மான், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மனித இம்யூனோகுளோபுலின் என்ற சர்ச்சைக்குரிய மருந்தை இறக்குமதி செய்ததன் பின்னணியில் கெஹலிய ரம்புக்வெல்ல இருப்பதாக தெரிவித்தார்.இதுவரையில் அவரை கைது செய்யாமை தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement