• May 19 2024

முல்லைத்தீவில் சுகாதாரதுறை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு..!samugammedia

Tharun / Jan 16th 2024, 12:25 pm
image

Advertisement

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சுகாதாரதுறை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பும், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி, நாடளாவிய ரீதியில் இருக்கும் வைத்தியசாலையில் பணியாற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், வைத்தியசாலை மேற்பார்வையாளர்கள், தொலைபேசி இயக்குனர்கள், பரிசாரகர்கள், சுகாதாரப் பணி உதவியாளர்கள் ஆகிய அனைத்து சுகாதார ஊழியர்கள் உட்பட இணைந்த சுகாதார தொழிற்சங்கங்களால் சுகயீன விடுமுறை போராட்டதின  இன்று (16) முன்னெடுதுள்ளனர். 

குறித்த விடயம் தொடர்பில் சுகாதார தொழிற்சங்கத்தினால் முன்னரே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த போராட்டம் இன்று (16) தொடக்கம் நாளை (17 )வரை இடம்பெறவுள்ளது.

இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையிலும் பணிப்பகிஸ்கரிப்பும் , கவனயீர்ப்பு போராட்டமும் இன்று இடம்பெற்றிருந்தது.

குறிப்பாக பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட நிலையில் தமக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கபடவில்லை. எனவே அரசாங்கத்தின் அநீதியான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.

சுகாதார ஊழியர்கள் இணைந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆகியவை குறித்த பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

முல்லைத்தீவில் சுகாதாரதுறை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு.samugammedia முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சுகாதாரதுறை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பும், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி, நாடளாவிய ரீதியில் இருக்கும் வைத்தியசாலையில் பணியாற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், வைத்தியசாலை மேற்பார்வையாளர்கள், தொலைபேசி இயக்குனர்கள், பரிசாரகர்கள், சுகாதாரப் பணி உதவியாளர்கள் ஆகிய அனைத்து சுகாதார ஊழியர்கள் உட்பட இணைந்த சுகாதார தொழிற்சங்கங்களால் சுகயீன விடுமுறை போராட்டதின  இன்று (16) முன்னெடுதுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் சுகாதார தொழிற்சங்கத்தினால் முன்னரே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த போராட்டம் இன்று (16) தொடக்கம் நாளை (17 )வரை இடம்பெறவுள்ளது.இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையிலும் பணிப்பகிஸ்கரிப்பும் , கவனயீர்ப்பு போராட்டமும் இன்று இடம்பெற்றிருந்தது.குறிப்பாக பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட நிலையில் தமக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கபடவில்லை. எனவே அரசாங்கத்தின் அநீதியான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.சுகாதார ஊழியர்கள் இணைந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆகியவை குறித்த பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement