• May 06 2024

பாராளுமன்றம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர்!

Chithra / Jan 16th 2024, 12:46 pm
image

Advertisement


ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு எதிர்வரும் 24ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றம் திறந்து வைக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றம் இம்மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் கடைசியாக கூடவுள்ளது.

இம்மாதம் 25ஆம் திகதி வியாழன் போயா விடுமுறை என்பதால் அந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும்.

இதன்படி எதிர்வரும் 24ஆம் திகதி நள்ளிரவில் நாடாளுமன்ற அமர்வு முடிவடைவதற்கான வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கோப், கோபா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட குழுக்கள் இரத்து செய்யப்பட்டு, அதன்படி அந்த குழுக்கள் அனைத்தும் மீண்டும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பதவிக்காலம் முடிவடைவதால் உயர் அதிகாரிகள் குழு, துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் சிறப்புக் குழுக்கள் மட்டுமே ஒழிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு 9ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு நிறைவடைந்தது.

பாராளுமன்றம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு எதிர்வரும் 24ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றம் திறந்து வைக்கப்படவுள்ளது.நாடாளுமன்றம் இம்மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் கடைசியாக கூடவுள்ளது.இம்மாதம் 25ஆம் திகதி வியாழன் போயா விடுமுறை என்பதால் அந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும்.இதன்படி எதிர்வரும் 24ஆம் திகதி நள்ளிரவில் நாடாளுமன்ற அமர்வு முடிவடைவதற்கான வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கோப், கோபா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட குழுக்கள் இரத்து செய்யப்பட்டு, அதன்படி அந்த குழுக்கள் அனைத்தும் மீண்டும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.பதவிக்காலம் முடிவடைவதால் உயர் அதிகாரிகள் குழு, துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் சிறப்புக் குழுக்கள் மட்டுமே ஒழிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு 9ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

Advertisement