• Dec 02 2025

முல்லைத்தீவு நாயாறு பாலம் உடைந்து முற்றிலும் சேதம்

Aathira / Dec 1st 2025, 8:25 am
image

முல்லைத்தீவு - திருகோணமலை வீதியில் (B297) உள்ள நாயாறு பிரதான பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக முற்றிலும் உடைந்து, போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளது.

இதனால் முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை மற்றும் கோக்கிலாய் பகுதிகளுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பித்துள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

அப்பாலத்துக்கு அப்பால் உள்ள கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருநாட்டுகேணி கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

எனினும், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் முதன்மை முகாம் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

முல்லைத்தீவு நாயாறு பாலம் உடைந்து முற்றிலும் சேதம் முல்லைத்தீவு - திருகோணமலை வீதியில் (B297) உள்ள நாயாறு பிரதான பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக முற்றிலும் உடைந்து, போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளது.இதனால் முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை மற்றும் கோக்கிலாய் பகுதிகளுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பித்துள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அப்பாலத்துக்கு அப்பால் உள்ள கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருநாட்டுகேணி கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் முதன்மை முகாம் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement