• May 20 2024

முஷாரப் எம்.பியை நீக்கியமை தவறு..! - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Chithra / Feb 29th 2024, 1:40 pm
image

Advertisement

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரப் நீக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானதென தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரப் இனால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, சிரான் குணரட்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் நீக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளிக்கப்பட்டது.


முஷாரப் எம்.பியை நீக்கியமை தவறு. - உயர்நீதிமன்றம் தீர்ப்பு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரப் நீக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானதென தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரப் இனால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, சிரான் குணரட்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் நீக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement