• Apr 27 2024

பணிக்கு வராத மூதூர் தள வைத்தியசாலை சிற்றூழியர்கள் - நோயாளர்கள் பெரும் அவதி

Chithra / Mar 29th 2024, 2:58 pm
image

Advertisement

 

மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்றைய தினம் (29) பணிக்கு வராமையினால் வைத்தியசாலையின் நாளாந்த செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பொது விடுமுறை தினங்களில் தாம் கடமை புரிகின்ற போதிலும் விடுமுறை தினத்தில் வேலை செய்வதற்கான கொடுப்பனவுகள் அரசாங்கத்தினால் வழங்கப்படுவதில்லை.

வேலை செய்தும் எந்தவித பிரயோசனமும் தமக்கு இல்லை. இதனால் இன்று பொது விடுமுறை என்பதால் அது தமக்கும் உரித்துடையதாகும்.

இதனால்  பணிக்கு சமூகமளிக்கவில்லை என சிற்றூழியர்கள் தெரிவித்துள்ளதாக எமது செய்தியார் தெரிவித்தார்.

இதனால் தூரப் பகுதிகளிலிருந்து வைத்திய சேவை பெறுவதற்காக வந்த நோயாளர்கள் பெரும் அசௌகரிகங்களை எதிர்நோக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பணிக்கு வராத மூதூர் தள வைத்தியசாலை சிற்றூழியர்கள் - நோயாளர்கள் பெரும் அவதி  மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்றைய தினம் (29) பணிக்கு வராமையினால் வைத்தியசாலையின் நாளாந்த செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.பொது விடுமுறை தினங்களில் தாம் கடமை புரிகின்ற போதிலும் விடுமுறை தினத்தில் வேலை செய்வதற்கான கொடுப்பனவுகள் அரசாங்கத்தினால் வழங்கப்படுவதில்லை.வேலை செய்தும் எந்தவித பிரயோசனமும் தமக்கு இல்லை. இதனால் இன்று பொது விடுமுறை என்பதால் அது தமக்கும் உரித்துடையதாகும்.இதனால்  பணிக்கு சமூகமளிக்கவில்லை என சிற்றூழியர்கள் தெரிவித்துள்ளதாக எமது செய்தியார் தெரிவித்தார்.இதனால் தூரப் பகுதிகளிலிருந்து வைத்திய சேவை பெறுவதற்காக வந்த நோயாளர்கள் பெரும் அசௌகரிகங்களை எதிர்நோக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement