• May 19 2024

ஹோட்டலில் மர்ம மரணம்..! இரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

Chithra / Feb 1st 2024, 9:46 am
image

Advertisement

 

காலி - ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்த நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி வீதி, வெவல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹோட்டலின் அறையில் தங்கியிருந்தவரிடமிருந்து பதில் கிடைக்காமை குறித்து ஹோட்டல் நிர்வாகம் ஹிக்கடுவ பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸாரும் ஹோட்டல் ஊழியர்களும் அந்த நபர் தங்கியிருந்த அறையின் ஜன்னலைத் திறந்து பார்த்த போது, ​​அந்த இளைஞன் குளியலறையில் இரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதை அவதானித்துள்ளனர்.

வறகொட, களனி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் நீதவான் விசாரணைக்காக சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

ஹோட்டலில் மர்ம மரணம். இரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்  காலி - ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்த நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி வீதி, வெவல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.ஹோட்டலின் அறையில் தங்கியிருந்தவரிடமிருந்து பதில் கிடைக்காமை குறித்து ஹோட்டல் நிர்வாகம் ஹிக்கடுவ பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பொலிஸாரும் ஹோட்டல் ஊழியர்களும் அந்த நபர் தங்கியிருந்த அறையின் ஜன்னலைத் திறந்து பார்த்த போது, ​​அந்த இளைஞன் குளியலறையில் இரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதை அவதானித்துள்ளனர்.வறகொட, களனி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சடலம் நீதவான் விசாரணைக்காக சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement