• Oct 04 2024

புதுக்குடியிருப்பில் மர்ம பொதி - தீவிர விசாரணையில் பொலிஸார்..!! samugammedia

Tamil nila / Jan 18th 2024, 9:05 pm
image

Advertisement

புதுக்குடியிருப்பில்  மர்மமான  இருந்த பொதி ஒன்றினை  புதுக்குடியிருப்பு பொலிஸார் மீட்டெடுத்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.


புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  மல்லிகைதீவு காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் பொதி ஒன்றினை யாரோ விட்டுச்சென்றுள்ளதாக புதுக்குடியிருப்பு  பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர் ஹேரத் தலைமையிலான பொலிஸார் விரைந்து சென்று குறித்த பொதியினை மீட்டுள்ளனர்.


கண்டெடுக்கப்பட்ட பொதியினுள்  50 ரக துப்பாக்கி ரவைகள்  37 மீட்டெடுக்கப்பட்டுள்ளதுடன். குறித்த பொதி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் மர்ம பொதியினை விட்டுச்சென்ற நபர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கபெறாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



புதுக்குடியிருப்பில் மர்ம பொதி - தீவிர விசாரணையில் பொலிஸார். samugammedia புதுக்குடியிருப்பில்  மர்மமான  இருந்த பொதி ஒன்றினை  புதுக்குடியிருப்பு பொலிஸார் மீட்டெடுத்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  மல்லிகைதீவு காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் பொதி ஒன்றினை யாரோ விட்டுச்சென்றுள்ளதாக புதுக்குடியிருப்பு  பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர் ஹேரத் தலைமையிலான பொலிஸார் விரைந்து சென்று குறித்த பொதியினை மீட்டுள்ளனர்.கண்டெடுக்கப்பட்ட பொதியினுள்  50 ரக துப்பாக்கி ரவைகள்  37 மீட்டெடுக்கப்பட்டுள்ளதுடன். குறித்த பொதி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.குறித்த இடத்தில் மர்ம பொதியினை விட்டுச்சென்ற நபர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கபெறாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement