• Sep 08 2024

ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்...!

Sharmi / Jul 10th 2024, 9:32 am
image

Advertisement

ஐக்கிய தேசியக் கட்சியின் தம்புள்ளை தொகுதி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள பதாகைகள் இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை மாநகரசபையின் முன்னாள் தவிசாளர் திருமதி மாயா பதெனியவின் வீட்டிலேயே குறித்த அலுவலகம் காணப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த அலுவலகம் முன்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தம்புள்ளை தொகுதி அமைப்பாளர் ஆகியோரின் உருவ படங்களுடன் கூடிய பதாகைகளே சேதப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல். ஐக்கிய தேசியக் கட்சியின் தம்புள்ளை தொகுதி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள பதாகைகள் இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.தம்புள்ளை மாநகரசபையின் முன்னாள் தவிசாளர் திருமதி மாயா பதெனியவின் வீட்டிலேயே குறித்த அலுவலகம் காணப்படுகின்றது.இந்நிலையில், குறித்த அலுவலகம் முன்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தம்புள்ளை தொகுதி அமைப்பாளர் ஆகியோரின் உருவ படங்களுடன் கூடிய பதாகைகளே சேதப்படுத்தப்பட்டுள்ளன.குறித்த சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement