வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினரால் யாழ் மாநகர சபை நிர்வாகத்திடம் காளாஞ்சி கையளிக்கும் வைபவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடாவருடம் நல்லூர் கந்தசுவாமி ஆலய ஆலய வருடாந்த மகோற்சவ காளாஞ்சி யாழ் மாநகர சபை நிர்வாகத்திடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.