நானாட்டான் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கையகப்படுத்தியுள்ளது.
நானாட்டான் பிரதேசசபை தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நானாட்டான் பிரதேச சபையில் இன்று (25) நடைபெற்றது.
இதன்போது தவிசாளரை தெரிவில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அன்ரன் அன்று ராஜன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் ஜெறோம் இருதயதாஸ் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டன.
வாக்கெடுப்பின் அடிப்படையில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அன்ரன் அன்று ராஜன் நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
அதனையடுத்து இடம்பெற்ற உபதவிசாளர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஞானராஜ் சோசை போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நானாட்டான் பிரதேச சபை தேசிய மக்கள் சக்தியின் வசம் நானாட்டான் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கையகப்படுத்தியுள்ளது. நானாட்டான் பிரதேசசபை தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நானாட்டான் பிரதேச சபையில் இன்று (25) நடைபெற்றது.இதன்போது தவிசாளரை தெரிவில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அன்ரன் அன்று ராஜன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் ஜெறோம் இருதயதாஸ் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டன. வாக்கெடுப்பின் அடிப்படையில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அன்ரன் அன்று ராஜன் நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். அதனையடுத்து இடம்பெற்ற உபதவிசாளர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஞானராஜ் சோசை போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.