• May 22 2026

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்பாடு ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்

Chithra / Oct 30th 2025, 8:47 am
image


விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு” இன்று (30) ஆரம்பிக்கப்பட உள்ளது. 

இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற உள்ளது. 

இந்தத் தேசியத் திட்டத்தில், மதத் தலைவர்கள், பொதுப் பாதுகாப்புக் குழுக்களைச் சேர்ந்த குழுக்கள், பொலிஸ் மற்றும் முப்படையினர் உறுப்பினர்கள், அத்துடன் சுமார் 50 வெளிநாட்டுத் தூதுவர்கள் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். 

இலங்கையின் இளம் சமுதாயம் மற்றும் பாடசாலை மாணவர்களின் வாழ்வைப் பாதிக்கும் விஷ போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

பொதுமக்களின் பங்கேற்புடன் கூடிய ஒரு பரந்த பொறிமுறையின் ஊடாக இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், போதைப்பொருட்களின் விநியோகத்தையும் அதற்கான தேவையையும் குறைப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 

அதன்படி, பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பொலிஸ், முப்படையினர், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் உட்பட பல அமைப்புகள் இன்று முதல் இந்தத் திட்டத்தில் இணைக்கப்படும். 

இந்தத் திட்டத்துடன் இணைந்ததாக, அனைத்து மாகாண சபைகள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரிகள் உறுதிமொழி எடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 


போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்பாடு ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம் விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு” இன்று (30) ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற உள்ளது. இந்தத் தேசியத் திட்டத்தில், மதத் தலைவர்கள், பொதுப் பாதுகாப்புக் குழுக்களைச் சேர்ந்த குழுக்கள், பொலிஸ் மற்றும் முப்படையினர் உறுப்பினர்கள், அத்துடன் சுமார் 50 வெளிநாட்டுத் தூதுவர்கள் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். இலங்கையின் இளம் சமுதாயம் மற்றும் பாடசாலை மாணவர்களின் வாழ்வைப் பாதிக்கும் விஷ போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பொதுமக்களின் பங்கேற்புடன் கூடிய ஒரு பரந்த பொறிமுறையின் ஊடாக இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், போதைப்பொருட்களின் விநியோகத்தையும் அதற்கான தேவையையும் குறைப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதன்படி, பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பொலிஸ், முப்படையினர், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் உட்பட பல அமைப்புகள் இன்று முதல் இந்தத் திட்டத்தில் இணைக்கப்படும். இந்தத் திட்டத்துடன் இணைந்ததாக, அனைத்து மாகாண சபைகள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரிகள் உறுதிமொழி எடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement