• Mar 20 2025

வவுனியாவில் தேசிய மக்கள் சக்தி வேட்புமனுத் தாக்கல்..!

Sharmi / Mar 20th 2025, 10:32 am
image

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேசிய மக்கள் சக்தி இன்று(20) தாக்கல் செய்தது.

வவுனியா மாநகர சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேசசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை,சிங்கள பிரதேசசபை ஆகியவற்றில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தது.

வேட்புமனுவினை பாராளுமன்றஉறுப்பினர் செல்வத்தம்பி திலகநாதன் தலைமையில் சென்ற வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் முக்கியஸ்தர்கள் சகிதம் இன்று கையளித்திருந்தனர்.  

வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி இம்முறை போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வவுனியாவில் தேசிய மக்கள் சக்தி வேட்புமனுத் தாக்கல். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேசிய மக்கள் சக்தி இன்று(20) தாக்கல் செய்தது.வவுனியா மாநகர சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேசசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை,சிங்கள பிரதேசசபை ஆகியவற்றில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தது.வேட்புமனுவினை பாராளுமன்றஉறுப்பினர் செல்வத்தம்பி திலகநாதன் தலைமையில் சென்ற வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் முக்கியஸ்தர்கள் சகிதம் இன்று கையளித்திருந்தனர்.  வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி இம்முறை போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement