• Sep 20 2024

பட்டப்பகலில் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட கடற்படை தளபதி ! samugammedia

Tamil nila / Jul 11th 2023, 6:34 pm
image

Advertisement

உக்ரைன் மீது பயங்கர ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர் என கருதப்படும் புடினுடைய கடற்படை தளபதி ஒருவர், பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

உக்ரைன் மீது பயங்கர ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர் என கருதப்படும் புடினுடைய கடற்படை தளபதியான ஸ்டானிஸ்லாவ் (Stanislav Rzhitsky, 42) என்பவர், பட்டப்பகலில், ஜாகிங் சென்றபோது மர்ம நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் ரஷ்யாவிலுள்ள Krasnodar என்ற நகரில், அவர் ஜாகிங் சென்றுகொண்டிருக்கும்போது ஒருவர் அவரைத் துப்பாக்கியால் சுட்டார், நெஞ்சிலும் முதுகிலும் நான்கு முறை சுடப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.அவரது கைக்கடிகாரம் முதலான எந்த பொருளும் திருட்டு போகாததால், இது கொள்ளை முயற்சி அல்ல என தெரியவந்துள்ளது.

இருப்பினும் உக்ரைன் நகரமான Vinnytsia மீது ஏவுகணை ஒன்றை ஏவ ஸ்டானிஸ்லாவ் உத்தரவிட, அந்த ஏவுகணை 27 பேரை பலிகொண்டது.உயிரிழந்தவர்களில், நான்கு வயதுக் குழந்தையான லிஸாவை யாராலும் மறக்கமுடியாது. லிஸாவின் தாய் ஐரினா அவளை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வரும்போது அவர்கள் இருவரும் ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளானார்கள். தாக்குதலில் லிஸா கொல்லப்பட்டாள், அவளது தாய் படுகாயமடைந்தார்.

மேலும் ஸ்டானிஸ்லாவை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர், CCTV இல்லாத இடத்தில் வைத்துத்தான் அவரைத் தாக்கியுள்ளார். என்றாலும், தாங்கள் நீல நிற தொப்பி அணிந்த நடுத்தர வயது ஆண் ஒருவரைத் தேடிவருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்

பட்டப்பகலில் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட கடற்படை தளபதி samugammedia உக்ரைன் மீது பயங்கர ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர் என கருதப்படும் புடினுடைய கடற்படை தளபதி ஒருவர், பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.உக்ரைன் மீது பயங்கர ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர் என கருதப்படும் புடினுடைய கடற்படை தளபதியான ஸ்டானிஸ்லாவ் (Stanislav Rzhitsky, 42) என்பவர், பட்டப்பகலில், ஜாகிங் சென்றபோது மர்ம நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.மேலும் ரஷ்யாவிலுள்ள Krasnodar என்ற நகரில், அவர் ஜாகிங் சென்றுகொண்டிருக்கும்போது ஒருவர் அவரைத் துப்பாக்கியால் சுட்டார், நெஞ்சிலும் முதுகிலும் நான்கு முறை சுடப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.அவரது கைக்கடிகாரம் முதலான எந்த பொருளும் திருட்டு போகாததால், இது கொள்ளை முயற்சி அல்ல என தெரியவந்துள்ளது.இருப்பினும் உக்ரைன் நகரமான Vinnytsia மீது ஏவுகணை ஒன்றை ஏவ ஸ்டானிஸ்லாவ் உத்தரவிட, அந்த ஏவுகணை 27 பேரை பலிகொண்டது.உயிரிழந்தவர்களில், நான்கு வயதுக் குழந்தையான லிஸாவை யாராலும் மறக்கமுடியாது. லிஸாவின் தாய் ஐரினா அவளை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வரும்போது அவர்கள் இருவரும் ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளானார்கள். தாக்குதலில் லிஸா கொல்லப்பட்டாள், அவளது தாய் படுகாயமடைந்தார்.மேலும் ஸ்டானிஸ்லாவை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர், CCTV இல்லாத இடத்தில் வைத்துத்தான் அவரைத் தாக்கியுள்ளார். என்றாலும், தாங்கள் நீல நிற தொப்பி அணிந்த நடுத்தர வயது ஆண் ஒருவரைத் தேடிவருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்

Advertisement

Advertisement

Advertisement