• Sep 08 2024

திடீரென வீதியில் முறிந்து விழுந்த வேப்ப மரம்...! பொலிஸ் உத்தியோகத்தருக்கு நடந்த விபரீதம்...!

Sharmi / May 17th 2024, 1:47 pm
image

Advertisement

அநுராதபுரம் - கண்டி வீதியில் காவக்குளம் சந்தியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மரமொன்று வீழ்ந்ததில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று(17) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பொலிஸ் அதிகாரி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வீதிக்கு அருகில் இருந்த மரம் ஒன்று அவர் மீது விழுந்துள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரை அநுராதபுரம் போதனா பொது வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


திடீரென வீதியில் முறிந்து விழுந்த வேப்ப மரம். பொலிஸ் உத்தியோகத்தருக்கு நடந்த விபரீதம். அநுராதபுரம் - கண்டி வீதியில் காவக்குளம் சந்தியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மரமொன்று வீழ்ந்ததில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இந்த விபத்து இன்று(17) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த விபத்தில் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த பொலிஸ் அதிகாரி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வீதிக்கு அருகில் இருந்த மரம் ஒன்று அவர் மீது விழுந்துள்ளது.இந்நிலையில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரை அநுராதபுரம் போதனா பொது வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement