• May 18 2024

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நெதன்யாகு..!!

Tamil nila / May 4th 2024, 6:52 am
image

Advertisement

இஸ்ரேலிய இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்ட்களை பிறப்பிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் திட்டங்கள் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் கவலையடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் மீது போர்க்குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ஐசிசி பட்டியலில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று வருடங்களாக “ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில்” இஸ்ரேல் படைகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டத்தின் கீழ் தனிநபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது மற்றும் அவர்கள் மீது மிகக் கடுமையான குற்றங்களுக்கான வழக்குகளை விசாரிக்கும்.

முன்னதாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், முன்னாள் லிபிய தலைவர் முயம்மர் கடாபி, உகாண்டா இராணுவத் தலைவர் ஜோசப் கோனி ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தது.

இந்த திட்டம் குறித்து பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், இந்த நடவடிக்கையின் மூலம் தனது நாட்டை பாதுகாக்கும் முயற்சியை குலைக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது என்றார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நெதன்யாகு. இஸ்ரேலிய இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்ட்களை பிறப்பிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் திட்டங்கள் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் கவலையடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அவர்கள் மீது போர்க்குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ஐசிசி பட்டியலில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கடந்த மூன்று வருடங்களாக “ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில்” இஸ்ரேல் படைகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.சர்வதேச சட்டத்தின் கீழ் தனிநபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது மற்றும் அவர்கள் மீது மிகக் கடுமையான குற்றங்களுக்கான வழக்குகளை விசாரிக்கும்.முன்னதாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், முன்னாள் லிபிய தலைவர் முயம்மர் கடாபி, உகாண்டா இராணுவத் தலைவர் ஜோசப் கோனி ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தது.இந்த திட்டம் குறித்து பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், இந்த நடவடிக்கையின் மூலம் தனது நாட்டை பாதுகாக்கும் முயற்சியை குலைக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement