விமான நிலையத்துக்கு பிரவேசிக்கும் மக்களுக்காக பொதுப் போக்குவரத்து சேவையொன்றின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்வதன் ஆரம்ப நடவடிக்கையாக, நேற்று முதல் விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரை தனியார் பேருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அவெரிவத்தை பேருந்து தரிப்பு நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் இந்த பேருந்து நேற்று முதல் விமான நிலையத்திலிருந்து ஆரம்பிக்கின்றது.
இந்த பேருந்து சேவையை 24 மணி நேரச் சேவையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது தனியார் துறையின் பேருந்து ஒன்றைச் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் பயணப் பொதிகளைக் கொண்டு வரும் வசதிகளுடன் பேருந்து சேவை ஒன்றை, இந்த சேவைக்கு ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு தெரிவித்தார்.
290 ரூபாய் கட்டணத்திற்கு கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கி அதி சொகுசு வசதிகளுடன் செல்வதற்கான வாய்ப்பு நேற்று முதல் பயணிகளுக்குக் கிடைத்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பிரவேசிக்கும் பயணிகளுக்காக புதிய பேருந்து சேவை விமான நிலையத்துக்கு பிரவேசிக்கும் மக்களுக்காக பொதுப் போக்குவரத்து சேவையொன்றின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்வதன் ஆரம்ப நடவடிக்கையாக, நேற்று முதல் விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரை தனியார் பேருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அவெரிவத்தை பேருந்து தரிப்பு நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் இந்த பேருந்து நேற்று முதல் விமான நிலையத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. இந்த பேருந்து சேவையை 24 மணி நேரச் சேவையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது தனியார் துறையின் பேருந்து ஒன்றைச் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் பயணப் பொதிகளைக் கொண்டு வரும் வசதிகளுடன் பேருந்து சேவை ஒன்றை, இந்த சேவைக்கு ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு தெரிவித்தார். 290 ரூபாய் கட்டணத்திற்கு கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கி அதி சொகுசு வசதிகளுடன் செல்வதற்கான வாய்ப்பு நேற்று முதல் பயணிகளுக்குக் கிடைத்துள்ளது.