• May 30 2025

புதிய கொரோனா திரிபால் மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனைகள் தீவிரம்

Chithra / May 29th 2025, 7:55 am
image


புதிய கோவிட் 19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, சுகாதார அமைச்சு சில மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள் தற்போது கோவிட் 19 நோயாளிகளைக் கண்டறிய அதிக அவதானத்துடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் காய்ச்சலால் அனுமதிக்கப்படும் அல்லது சிகிச்சை பெறும் நோயாளிகள் தொடர்பான கண்காணிப்பை அதிகரிக்க மருத்துவமனைகளுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும், ஆனால் உடனடியாக எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

புதிய கொரோனா திரிபால் மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனைகள் தீவிரம் புதிய கோவிட் 19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, சுகாதார அமைச்சு சில மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள் தற்போது கோவிட் 19 நோயாளிகளைக் கண்டறிய அதிக அவதானத்துடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் காய்ச்சலால் அனுமதிக்கப்படும் அல்லது சிகிச்சை பெறும் நோயாளிகள் தொடர்பான கண்காணிப்பை அதிகரிக்க மருத்துவமனைகளுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், இலங்கை தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும், ஆனால் உடனடியாக எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement