மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தராக பேராசிரியர் மொண்டே காஸிம் நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1985 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க சட்டத்தின் திருத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 32 ஆவது பிரிவின் விதிகளின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் ஐந்து வருடகாலத்துக்கு குறித்த நியமனத்தை வழங்கியுள்ளதாக குறித்த ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.