• May 02 2024

அந்நியச் செலாவணியை அதிகரிக்க இரவு நேர பொருளாதாரம் - அமைச்சர் டயானா அதிரடி..!samugammedia

mathuri / Feb 23rd 2024, 6:28 am
image

Advertisement

இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70 சதவீதம் வரை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் டயானா இவ்வாறு தெரிவித்தார். 

அதற்காக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக் கூடிய இடங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் திருத்தியமைத்து,  தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும்  இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரவுப் பொருளாதாரம் தொடர்பில் சில தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் உலகின் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இரவு நேரப் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அந்நியச் செலாவணியை அதிகரிக்க இரவு நேர பொருளாதாரம் - அமைச்சர் டயானா அதிரடி.samugammedia இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70 சதவீதம் வரை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் டயானா இவ்வாறு தெரிவித்தார். அதற்காக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக் கூடிய இடங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் திருத்தியமைத்து,  தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும்  இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், இரவுப் பொருளாதாரம் தொடர்பில் சில தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் உலகின் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இரவு நேரப் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement