• May 19 2024

ஜனாதிபதி வேட்பாளர் பசில் இல்லை! நாமலுக்கு தகுதி இல்லை! மகிந்தவின் சகா பகிரங்கம்

Chithra / Mar 3rd 2024, 12:35 pm
image

Advertisement

 

மொட்டுக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை முன்வைத்தால், அவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விட திறமையானவராக இருக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பலவீனமான வேட்பாளரை முன்வைத்தால் அவரது கட்சி உறுப்புரிமை தொடர்பில் அவர் தீர்மானம் எடுக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு இது சரியான தருணம் அல்ல எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

உடுகம்பொல பிரதேசத்தில் முன்னாள் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமான வேறு யாரும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிப்பேன். 

ஆனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார். அது எனக்கு நன்றாகவே தெரியும். நாமல் தம்பிக்கு இது நேரமில்லை. 

இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, அவருக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. நான் இதை நாமலின் முகத்திற்கு நேரிலேயே சொல்லியிருக்கிறேன். எனவே அவர்  சரியான நேரத்தில்  முன்வர வேண்டும். என தெரிவித்தார். 

ஜனாதிபதி வேட்பாளர் பசில் இல்லை நாமலுக்கு தகுதி இல்லை மகிந்தவின் சகா பகிரங்கம்  மொட்டுக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை முன்வைத்தால், அவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விட திறமையானவராக இருக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.பலவீனமான வேட்பாளரை முன்வைத்தால் அவரது கட்சி உறுப்புரிமை தொடர்பில் அவர் தீர்மானம் எடுக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.அத்துடன் நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு இது சரியான தருணம் அல்ல எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.உடுகம்பொல பிரதேசத்தில் முன்னாள் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமான வேறு யாரும் இல்லை என்றும் தெரிவித்தார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிப்பேன். ஆனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார். அது எனக்கு நன்றாகவே தெரியும். நாமல் தம்பிக்கு இது நேரமில்லை. இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, அவருக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. நான் இதை நாமலின் முகத்திற்கு நேரிலேயே சொல்லியிருக்கிறேன். எனவே அவர்  சரியான நேரத்தில்  முன்வர வேண்டும். என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement