• Jun 20 2025

சிறுவர் நன்னடத்தை பாடசாலைக்கு வடக்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்!

shanuja / Jun 19th 2025, 8:43 pm
image

வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தால் இயக்கப்படும் அச்சுவேலி சிறுவர் பாடசாலைக்கு, வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்   இன்று (17) திடீர் கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்டார். 


சிறுவர் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர், அவர்களின் தேவைகளை கேட்டறிந்துகொண்டதுடன் மரநடுகையிலும் ஈடுபட்டார். அத்துடன் பாடசாலை தொடர்பிலான  பல விடயங்கள்  பாடசாலை சமூகத்தினரால் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டன. 


அத்துடன் சிறுவர் பாடசாலையைச் சூழவுள்ள பகுதியை துப்புரவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் கோரியதுடன், அந்தப் பிரதேசத்துக்கான முதன்மை திட்டத்தை தயாரிக்குமாறும் கேட்டுக்கொண்டார். 


இதற்கிடையே அதேவளாகத்தில் இயங்கிவரும் மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தின் வைத்தியசாலைகளையும் ஆளுநர் பார்வையிட்டார். உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு நிலையத்தை இங்கு அமைப்பது தொடர்பில் ஆராயப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சிறுவர் நன்னடத்தை பாடசாலைக்கு வடக்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம் வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தால் இயக்கப்படும் அச்சுவேலி சிறுவர் பாடசாலைக்கு, வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்   இன்று (17) திடீர் கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்டார். சிறுவர் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர், அவர்களின் தேவைகளை கேட்டறிந்துகொண்டதுடன் மரநடுகையிலும் ஈடுபட்டார். அத்துடன் பாடசாலை தொடர்பிலான  பல விடயங்கள்  பாடசாலை சமூகத்தினரால் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டன. அத்துடன் சிறுவர் பாடசாலையைச் சூழவுள்ள பகுதியை துப்புரவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் கோரியதுடன், அந்தப் பிரதேசத்துக்கான முதன்மை திட்டத்தை தயாரிக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதற்கிடையே அதேவளாகத்தில் இயங்கிவரும் மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தின் வைத்தியசாலைகளையும் ஆளுநர் பார்வையிட்டார். உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு நிலையத்தை இங்கு அமைப்பது தொடர்பில் ஆராயப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement