• Jun 16 2025

பதிலடி கொடுக்காமல் பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை..! - இஸ்ரேலுக்கு ஈரான் சபதம்..!

shanuja / Jun 16th 2025, 11:40 am
image

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் பதிலடி கொடுக்காமல் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக மாட்டோம் என்று இஸ்ரேலுக்கு ஈரான் சபதம் அளித்துள்ளது. 


இஸ்ரேல் - ஈரான் இடையேயான தாக்குதல் 3ஆவது நாளாகத் தொடர்கின்ற நிலையில் நேற்று ஈரானின் தலைநகர் மீது இஸ்ரேல் புதியதொரு குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளது. 


குணடுவீச்சுத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 224 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகத் ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இரு நாடுகளும் புதிய தாக்குதல்களைத் தொடங்கி பெரும்  மோதல் ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ள நிலையில்,  போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் இணங்க வேண்டும் என்று மற்றைய நாடுகள் தெரிவித்துள்ளன. 


இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஈரான் அதிகாரிகள் குழுவினர் தெரிவிக்கையில், 


இஸ்ரேலின் தாக்குதலுக்கு தற்போது போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என்று ஈரான் மத்தியஸ்தர்களான கட்டார் மற்றும் ஓமானிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இஸ்ரேலின் முன்கூட்டிய தாக்குதல்களுக்கு ஈரான் தனது பதில் தாக்குதலை முடித்த பின்னரே தீவிர பேச்சுவார்த்தைகளைத் தொடருவோம். 


"தாக்குதலுக்கு உள்ளாகும்போது பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது" 


வெள்ளிக்கிழமை காலை ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதலை நடத்தியது. இது ஈரானின் இராணுவத் தலைமையின் உயர்மட்டத்தை அழித்தது மற்றும் அதன் அணுசக்தி தளங்களை சேதப்படுத்தியது.


நீண்டகால எதிரிகளுக்கு இடையேயான மிகப்பெரிய மோதலாக உருவெடுத்துள்ள இந்த மோதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக "நரகத்தின் வாயில்களைத் திறப்பதாக" ஈரான் சபதம் செய்துள்ளது.- என்றனர்.

பதிலடி கொடுக்காமல் பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை. - இஸ்ரேலுக்கு ஈரான் சபதம். இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் பதிலடி கொடுக்காமல் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக மாட்டோம் என்று இஸ்ரேலுக்கு ஈரான் சபதம் அளித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான தாக்குதல் 3ஆவது நாளாகத் தொடர்கின்ற நிலையில் நேற்று ஈரானின் தலைநகர் மீது இஸ்ரேல் புதியதொரு குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளது. குணடுவீச்சுத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 224 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகத் ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இரு நாடுகளும் புதிய தாக்குதல்களைத் தொடங்கி பெரும்  மோதல் ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ள நிலையில்,  போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் இணங்க வேண்டும் என்று மற்றைய நாடுகள் தெரிவித்துள்ளன. இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஈரான் அதிகாரிகள் குழுவினர் தெரிவிக்கையில், இஸ்ரேலின் தாக்குதலுக்கு தற்போது போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என்று ஈரான் மத்தியஸ்தர்களான கட்டார் மற்றும் ஓமானிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் முன்கூட்டிய தாக்குதல்களுக்கு ஈரான் தனது பதில் தாக்குதலை முடித்த பின்னரே தீவிர பேச்சுவார்த்தைகளைத் தொடருவோம். "தாக்குதலுக்கு உள்ளாகும்போது பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது" வெள்ளிக்கிழமை காலை ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதலை நடத்தியது. இது ஈரானின் இராணுவத் தலைமையின் உயர்மட்டத்தை அழித்தது மற்றும் அதன் அணுசக்தி தளங்களை சேதப்படுத்தியது.நீண்டகால எதிரிகளுக்கு இடையேயான மிகப்பெரிய மோதலாக உருவெடுத்துள்ள இந்த மோதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக "நரகத்தின் வாயில்களைத் திறப்பதாக" ஈரான் சபதம் செய்துள்ளது.- என்றனர்.

Advertisement

Advertisement

Advertisement