காலி ஹபுகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலியின் பல பகுதிகளுக்கு நாளை காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரைநீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
குறிப்பாக, போபே, பொத்தல, ஹபுகல, ஹபராதுவ, பூஸ்ஸ, அக்மீமன மற்றும் ரத்கம ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.