• Mar 05 2026

Thansita / Aug 11th 2025, 5:20 pm
image

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் இன்று இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், 5 போதை மாத்திரைகளுடன் ஒருவரை யாழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கை, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து மேற்கொண்டதன் விளைவாக இடம்பெற்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது பொலிஸ் நிலையத்தில் வைத்துக் விசாரிக்கப்படுகின்றார்.

விசாரணைகளை முடித்த பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் 5 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் இன்று இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், 5 போதை மாத்திரைகளுடன் ஒருவரை யாழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்த நடவடிக்கை, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து மேற்கொண்டதன் விளைவாக இடம்பெற்றது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது பொலிஸ் நிலையத்தில் வைத்துக் விசாரிக்கப்படுகின்றார். விசாரணைகளை முடித்த பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement