• Sep 30 2024

பெரிய வெங்காயம் தொடர்பில் மேலும் ஒரு தகவல் - விண்ணை தொடும் மரக்கறி விலைகள்..!!Samugammedia

Tamil nila / Dec 20th 2023, 10:32 pm
image

Advertisement

இந்தியாவின் பெரிய வெங்காய ஏற்றுமதித் தடை இன்னும் 05 மாதங்களுக்கு நீக்கப்பட மாட்டாது என ரொய்ட்டர்ஸ் செய்தி ​சேவை இன்று (20) தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் வரை இந்தியாவில் வெங்காய விலையை குறைவாக வைத்திருக்க மோடி அரசின் முயற்சிகளே வெங்காய ஏற்றுமதி தடைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்றுமதி சந்தையில் இருந்து இந்தியா விலகிய பிறகு சீனா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் வெங்காயத்தின் விலையை உயர்த்தியுள்ளதால், இந்தியாவில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவாக இருப்பதையும் இது காட்டுகிறது.

இன்று சந்தையில் வெங்காயம் மட்டுமின்றி காய்கறிகளும் மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

ஒரு கிலோ பெரிய வெங்காயம் 600 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வெங்காயம் மற்றும் முட்டை விலை உயர்ந்து வரும் நிலையில், சந்தையில் காய்கறிகளின் விலையும் நுகர்வோரால் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இன்று கறி மிளகாய் 600 ரூபாயாகவும், தக்காளி 900 ரூபாயாகவும், முட்டைகோஸ், போஞ்சி 600 ரூபாயாகவும், வெள்ளரி 240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ பச்சை மிளகாய் இன்று 1500 முதல் 2000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, புறக்கோட்டையில் உள்ள கடைகளில் உள்ள எடை மற்றும் அளவீட்டு கருவிகளை அளவீட்டு அலகுகள் மற்றும் தர நிர்ணய சேவைகள் துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

இதன்போது போலி எடை அளவீட்டு கருவிகளை பயன்படுத்திய வர்த்தகர்கள் மற்றும் பதிவு செய்யப்படாத அளவீட்டு கருவிகளை வைத்திருந்த 21 வர்த்தகர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயம் தொடர்பில் மேலும் ஒரு தகவல் - விண்ணை தொடும் மரக்கறி விலைகள்.Samugammedia இந்தியாவின் பெரிய வெங்காய ஏற்றுமதித் தடை இன்னும் 05 மாதங்களுக்கு நீக்கப்பட மாட்டாது என ரொய்ட்டர்ஸ் செய்தி ​சேவை இன்று (20) தெரிவித்துள்ளது.2024ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் வரை இந்தியாவில் வெங்காய விலையை குறைவாக வைத்திருக்க மோடி அரசின் முயற்சிகளே வெங்காய ஏற்றுமதி தடைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.ஏற்றுமதி சந்தையில் இருந்து இந்தியா விலகிய பிறகு சீனா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் வெங்காயத்தின் விலையை உயர்த்தியுள்ளதால், இந்தியாவில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவாக இருப்பதையும் இது காட்டுகிறது.இன்று சந்தையில் வெங்காயம் மட்டுமின்றி காய்கறிகளும் மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது.ஒரு கிலோ பெரிய வெங்காயம் 600 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.வெங்காயம் மற்றும் முட்டை விலை உயர்ந்து வரும் நிலையில், சந்தையில் காய்கறிகளின் விலையும் நுகர்வோரால் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.இன்று கறி மிளகாய் 600 ரூபாயாகவும், தக்காளி 900 ரூபாயாகவும், முட்டைகோஸ், போஞ்சி 600 ரூபாயாகவும், வெள்ளரி 240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிலோ பச்சை மிளகாய் இன்று 1500 முதல் 2000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே, புறக்கோட்டையில் உள்ள கடைகளில் உள்ள எடை மற்றும் அளவீட்டு கருவிகளை அளவீட்டு அலகுகள் மற்றும் தர நிர்ணய சேவைகள் துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.இதன்போது போலி எடை அளவீட்டு கருவிகளை பயன்படுத்திய வர்த்தகர்கள் மற்றும் பதிவு செய்யப்படாத அளவீட்டு கருவிகளை வைத்திருந்த 21 வர்த்தகர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement