• Feb 20 2025

சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறி பாடசாலை திறந்து வைப்பு

Chithra / Feb 17th 2025, 2:28 pm
image


சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறி பாடசாலை  யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் கனகராசா சிறிமோகனனால் திறந்து வைக்கப்பட்டது.

சுழிபுரம் மேற்கு கலைமகள் சனசமூக நிலையத்தின் தலைவர் வடிவேலு கோகுலநேசன் தலைமையில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றது .

இதன் பொழுது விருந்தினர்கள் வடலியடைப்பு கலைவானி கலலமன்றத்தினரின் தமிழ் இனியத்துடன் வரவேற்பளிக்கபட்டனர்.

தொடர்ந்து சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறிப்பாடசாலை நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து சுழிபுரம் கலைமகள் சனசமூக நிலையத்தில் 50 வயதிற்கு மேற்பட்ட சமூக சேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் சனசமூக நிலையத்திற்கான சந்தாப் பணத்தினை செலுத்தும் அங்கத்தவர்களை ஊக்குவிக்கும் முகமாக துவிச்சக்கர வண்டி குலுக்கல் சீட்டின் மூலம் வழங்கப்பட்டது.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட நபர் கிராமத்தின் பொருண்மியம் நலிந்த மாணவருக்கு துவிச்சக்கர வண்டியினை வழங்குமாறு கையளித்தார்.

விசேட கலை நிகழ்வுகளாக கலைமகள் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள்,பொன்னாலை சந்திர பரத கலாலயத்தின் திருமுறை ஆடல் நாட்டிய நிகழ்வு,அளவையூர் கலைவானி வில்லிசை குழுவின் திரு நீலகண்டர் வரலாறு வில்லிசை, சண் நாடக குழுவினரின் முட்டை நகைச்சுவை நாடகம் என்பன அரங்கேறின.

தொடர்ந்து விருந்தினர்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதன் பொழுது பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க கனகராசா சிறிமோகனன்,சிறப்பு விருந்தினராக சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார், கௌரவ விருந்தினர்களாக யாழ் மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் சுப்பிரமணியம் உதயபாலன்,வலி மேற்கு பிரதேச சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயரட்ணம் ஜெயராஜன் , சுழிபுரம் மேற்கு சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள்,அறநெறி பாடசாலை மாணவர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


சுழிபுரம் மேற்கு புலம்பெயர்தேச உறவுகள் மற்றும் கிராமத்தவர்களின் நிதிப் பங்களிப்புடன் அறநெறிப்பாடசாலை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறி பாடசாலை திறந்து வைப்பு சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறி பாடசாலை  யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் கனகராசா சிறிமோகனனால் திறந்து வைக்கப்பட்டது.சுழிபுரம் மேற்கு கலைமகள் சனசமூக நிலையத்தின் தலைவர் வடிவேலு கோகுலநேசன் தலைமையில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றது .இதன் பொழுது விருந்தினர்கள் வடலியடைப்பு கலைவானி கலலமன்றத்தினரின் தமிழ் இனியத்துடன் வரவேற்பளிக்கபட்டனர்.தொடர்ந்து சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறிப்பாடசாலை நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து சுழிபுரம் கலைமகள் சனசமூக நிலையத்தில் 50 வயதிற்கு மேற்பட்ட சமூக சேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.மேலும் சனசமூக நிலையத்திற்கான சந்தாப் பணத்தினை செலுத்தும் அங்கத்தவர்களை ஊக்குவிக்கும் முகமாக துவிச்சக்கர வண்டி குலுக்கல் சீட்டின் மூலம் வழங்கப்பட்டது.இதன் போது தெரிவு செய்யப்பட்ட நபர் கிராமத்தின் பொருண்மியம் நலிந்த மாணவருக்கு துவிச்சக்கர வண்டியினை வழங்குமாறு கையளித்தார்.விசேட கலை நிகழ்வுகளாக கலைமகள் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள்,பொன்னாலை சந்திர பரத கலாலயத்தின் திருமுறை ஆடல் நாட்டிய நிகழ்வு,அளவையூர் கலைவானி வில்லிசை குழுவின் திரு நீலகண்டர் வரலாறு வில்லிசை, சண் நாடக குழுவினரின் முட்டை நகைச்சுவை நாடகம் என்பன அரங்கேறின.தொடர்ந்து விருந்தினர்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதன் பொழுது பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க கனகராசா சிறிமோகனன்,சிறப்பு விருந்தினராக சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார், கௌரவ விருந்தினர்களாக யாழ் மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் சுப்பிரமணியம் உதயபாலன்,வலி மேற்கு பிரதேச சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயரட்ணம் ஜெயராஜன் , சுழிபுரம் மேற்கு சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள்,அறநெறி பாடசாலை மாணவர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.சுழிபுரம் மேற்கு புலம்பெயர்தேச உறவுகள் மற்றும் கிராமத்தவர்களின் நிதிப் பங்களிப்புடன் அறநெறிப்பாடசாலை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement