முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடந்த மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும் இது தொடர்பாக இரண்டு பெண்களும் ஆணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வௌியான தகவல்களுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
துமிந்த திசாநாயக்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடந்த மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.மேலும் இது தொடர்பாக இரண்டு பெண்களும் ஆணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வௌியான தகவல்களுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.