• Sep 20 2024

ஒக்சிஜன் சிலிண்டர்களை திருடி 40ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை – அதிரடியாக செயற்பட்ட நிர்வாகம்.! samugammedia

Tamil nila / May 6th 2023, 5:40 pm
image

Advertisement

பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் நிரப்பப்பட்ட மற்றும் வெற்று ஒக்சிஜன் சிலிண்டர்களை திருடி வேறு மாகாணங்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு ஒக்சிஜன் சிலிண்டர்களை வழங்கும் தனியார் நிறுவனமொன்றின் பணியாளர்களும் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் பிரகாரம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் ஒட்சிசன் விநியோகப் பிரிவின் சுகாதார உதவியாளர் ஒக்சிஜன் சிலிண்டர் ஒன்றை தனியார் ஒக்சிஜன் விநியோகஸ்தர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபா வரையில் விற்பனை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஒக்சிஜன் சிலிண்டர்களை திருடி 40ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை – அதிரடியாக செயற்பட்ட நிர்வாகம். samugammedia பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் நிரப்பப்பட்ட மற்றும் வெற்று ஒக்சிஜன் சிலிண்டர்களை திருடி வேறு மாகாணங்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு ஒக்சிஜன் சிலிண்டர்களை வழங்கும் தனியார் நிறுவனமொன்றின் பணியாளர்களும் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் பிரகாரம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் ஒட்சிசன் விநியோகப் பிரிவின் சுகாதார உதவியாளர் ஒக்சிஜன் சிலிண்டர் ஒன்றை தனியார் ஒக்சிஜன் விநியோகஸ்தர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபா வரையில் விற்பனை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement