பொது வாகன நிறுத்துமிடங்களில், வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திய முதல் 10 நிமிடங்களுக்குப் பின்னரே கட்டணம் வசூலிக்கப்படும் என்று கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பு மாநகர ஆணையர் பாலித நாணயக்கார ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
பொது வாகன நிறுத்துமிடங்களைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு, கால அளவைக் கண்காணிக்க பற்றுச்சீட்டு வழங்கப்படும்.
ஒரு வாகனம் நிறுத்தப்பட்டதும் கட்டணம் வசூலிக்க எந்த சட்டமும் இல்லை. வாகனம் தரிப்பிடத்தில் இருக்கும் முதல் 10 நிமிடங்களுக்கு கட்டணம் இலவசம்.
நபர் ஒருவர் பத்து நிமிடங்களுக்கு மேல் வாகனத்தை நிறுத்தி இருந்தால், அவர்களிடம் 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அதற்கு மேல் பணம் பெறுவது சாத்தியமில்லை.
அதேவேளை, விசேட விடுமுறை நாட்களிலும் நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை என கொழும்பு மாநகர ஆணையர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வாகன நிறுத்துமிடத்தில் முதல் 10 நிமிடங்களுக்குப் பிறகே கட்டணம்; வெளியான அறிவிப்பு. பொது வாகன நிறுத்துமிடங்களில், வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திய முதல் 10 நிமிடங்களுக்குப் பின்னரே கட்டணம் வசூலிக்கப்படும் என்று கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.இது தொடர்பில் கொழும்பு மாநகர ஆணையர் பாலித நாணயக்கார ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,பொது வாகன நிறுத்துமிடங்களைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு, கால அளவைக் கண்காணிக்க பற்றுச்சீட்டு வழங்கப்படும்.ஒரு வாகனம் நிறுத்தப்பட்டதும் கட்டணம் வசூலிக்க எந்த சட்டமும் இல்லை. வாகனம் தரிப்பிடத்தில் இருக்கும் முதல் 10 நிமிடங்களுக்கு கட்டணம் இலவசம்.நபர் ஒருவர் பத்து நிமிடங்களுக்கு மேல் வாகனத்தை நிறுத்தி இருந்தால், அவர்களிடம் 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அதற்கு மேல் பணம் பெறுவது சாத்தியமில்லை.அதேவேளை, விசேட விடுமுறை நாட்களிலும் நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை என கொழும்பு மாநகர ஆணையர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.