• Sep 22 2024

சஜித்தின் தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட கட்சி!

Tamil nila / Sep 22nd 2024, 7:32 am
image

Advertisement

2024ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்வியை ஐக்கிய மக்கள் சக்தியின் நா்டாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் சஜித் பிரேமதாசவுக்காக கடுமையாக பிரச்சாரம் செய்தோம் ஆனால் அது நடக்கவில்லை. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரா குமார திசாநாயக்க இருப்பார் என்பது இப்போது தெளிவாகிவிட்டது. ஜனநாயகம் மற்றும் நல்லெண்ணத்தின் உணர்வில் நான் எனது நண்பரை அழைத்து, கடினமான பாதையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்” என்று ஹர்ஷ டி சில்வா கூறினார்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்பார் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சஜித்தின் தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட கட்சி 2024ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்வியை ஐக்கிய மக்கள் சக்தியின் நா்டாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.“நாங்கள் சஜித் பிரேமதாசவுக்காக கடுமையாக பிரச்சாரம் செய்தோம் ஆனால் அது நடக்கவில்லை. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரா குமார திசாநாயக்க இருப்பார் என்பது இப்போது தெளிவாகிவிட்டது. ஜனநாயகம் மற்றும் நல்லெண்ணத்தின் உணர்வில் நான் எனது நண்பரை அழைத்து, கடினமான பாதையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்” என்று ஹர்ஷ டி சில்வா கூறினார்.இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்பார் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement