சாதாரண கடவுச்சீட்டு கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய இன்று முதல் குறித்த சேவைக்கான கட்டணம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கான கட்டணம் 5 ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 10 ஆயிரம் ரூபாயாக அரவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.