• Sep 20 2024

மலையகத்தில் முழங்கிய சங்கு - தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த மக்கள்!

Tamil nila / Sep 17th 2024, 10:17 pm
image

Advertisement

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து, பிரச்சாரக் கூட்டம் ஒன்று அட்டன் டயகம ஆக்ரபத்தனை நிசாந்தினி வரவேற்பு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. 

ஏற்பாட்டாளர்  குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்  சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணத்தில் இருந்து முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கலந்துகொண்டார். 

தமிழ் மக்களின் தனித்துவத்தை முன்னிறுத்தி போட்டியிடும் பொது  வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து பலர் உரையாற்றி இருந்தனர். அத்துடன் இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துக்கொண்டு தங்களது ஆதரவினை சங்கு சின்னத்திற்கு வழங்கியிருந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதில் மலையக ஏற்பாற்டார்களான  ஜஸ்டின் மற்றும் டொமினிக் ஆகியோரும் விருந்தினர்களாக  இணைந்து கொண்டிருந்தனர்.

மலையகத்தில் முழங்கிய சங்கு - தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து, பிரச்சாரக் கூட்டம் ஒன்று அட்டன் டயகம ஆக்ரபத்தனை நிசாந்தினி வரவேற்பு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. ஏற்பாட்டாளர்  குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்  சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணத்தில் இருந்து முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கலந்துகொண்டார். தமிழ் மக்களின் தனித்துவத்தை முன்னிறுத்தி போட்டியிடும் பொது  வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து பலர் உரையாற்றி இருந்தனர். அத்துடன் இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துக்கொண்டு தங்களது ஆதரவினை சங்கு சின்னத்திற்கு வழங்கியிருந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.இதில் மலையக ஏற்பாற்டார்களான  ஜஸ்டின் மற்றும் டொமினிக் ஆகியோரும் விருந்தினர்களாக  இணைந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement