• Oct 13 2024

பாராளுமன்ற தேர்தலில் ஊழல் மோசடி பேர்வழிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்- தேசியமக்கள் சக்தியினர் வலியுறுத்து..!

Sharmi / Oct 12th 2024, 3:28 pm
image

Advertisement

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையிலேயே வெற்றி பெற்றவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். எனவே, அதில் மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் வவுனியாவில் நேற்றையதினம் தமது வேட்பு மனுவினை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய சக்தி மிக்க வேட்பாளர் அணி வன்னியில் களம் காண்கின்றது.

அந்தவகையில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் ஊழல் , மோசடி ஏனைய துஸ்பிரயோகங்கள் அற்ற நேர்மையான ஆட்சியினை அமைப்பதற்கு நாங்கள் ஒன்றுதிரண்டுள்ளோம். மக்களின் ஆணைக்காக நாங்கள் காத்திருக்கின்றோம். 

மக்கள் ஆணையை பெற்று சமாதானமாக நின்மதியாக வாழக்கூடிய ஒரு தேசத்தினை கட்டி எழுப்புவோம்.இதேவேளை ஊழல் மோசடி பேர்வழிகளை நிராகரிக்க வேண்டும் என்று மக்களிடம் அன்பாக கேட்டுக்கொள்கின்றோம். 

இன்று ஜனாதிபதியின் பெயரை கூறி பல சுயேட்சைகுழுக்கள்  போட்டியிடுவதாக போலிபிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.

அவரது கையை வலுப்படுத்தும் ஒரே கட்சி தேசியமக்கள் சக்தி என்பதை கூறிக்கொள்கின்றேன்.அவ்வாறானவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். 

அத்துடன் இம்முறை பாராளுமன்றத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில்  விருப்பு வாக்கு முறைமை பார்க்கப்படாது என்று கூறுவது போலியான ஒரு கருத்துருவாக்கமே.

இம்முறை விருப்பு வாக்கின் அடிப்படையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அது தொடர்பாக எமது செயலாளர் ரில்வின் சில்வாவும் தெளிவுபடுத்தியுள்ளார். 

மக்கள் அது தொடர்பாக எவ்வித சந்தேகமும் அடையத்தேவையில்லை. நிச்சயமாக கூடுதலான விருப்பு வாக்கினை பெறுகின்ற வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்களே பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவார்கள் என்றனர்.

பாராளுமன்ற தேர்தலில் ஊழல் மோசடி பேர்வழிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்- தேசியமக்கள் சக்தியினர் வலியுறுத்து. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையிலேயே வெற்றி பெற்றவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். எனவே, அதில் மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் வவுனியாவில் நேற்றையதினம் தமது வேட்பு மனுவினை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய சக்தி மிக்க வேட்பாளர் அணி வன்னியில் களம் காண்கின்றது. அந்தவகையில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் ஊழல் , மோசடி ஏனைய துஸ்பிரயோகங்கள் அற்ற நேர்மையான ஆட்சியினை அமைப்பதற்கு நாங்கள் ஒன்றுதிரண்டுள்ளோம். மக்களின் ஆணைக்காக நாங்கள் காத்திருக்கின்றோம். மக்கள் ஆணையை பெற்று சமாதானமாக நின்மதியாக வாழக்கூடிய ஒரு தேசத்தினை கட்டி எழுப்புவோம்.இதேவேளை ஊழல் மோசடி பேர்வழிகளை நிராகரிக்க வேண்டும் என்று மக்களிடம் அன்பாக கேட்டுக்கொள்கின்றோம். இன்று ஜனாதிபதியின் பெயரை கூறி பல சுயேட்சைகுழுக்கள்  போட்டியிடுவதாக போலிபிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. அவரது கையை வலுப்படுத்தும் ஒரே கட்சி தேசியமக்கள் சக்தி என்பதை கூறிக்கொள்கின்றேன்.அவ்வாறானவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். அத்துடன் இம்முறை பாராளுமன்றத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில்  விருப்பு வாக்கு முறைமை பார்க்கப்படாது என்று கூறுவது போலியான ஒரு கருத்துருவாக்கமே.இம்முறை விருப்பு வாக்கின் அடிப்படையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அது தொடர்பாக எமது செயலாளர் ரில்வின் சில்வாவும் தெளிவுபடுத்தியுள்ளார். மக்கள் அது தொடர்பாக எவ்வித சந்தேகமும் அடையத்தேவையில்லை. நிச்சயமாக கூடுதலான விருப்பு வாக்கினை பெறுகின்ற வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்களே பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவார்கள் என்றனர்.

Advertisement

Advertisement

Advertisement