• Sep 24 2024

அநுர மீதான மக்கள் நம்பிக்கை ஒரே இரவில் தோன்றவில்லை- வாழ்த்துச் செய்தியில் சபாநாயகர் சுட்டிக்காட்டு..!

Sharmi / Sep 23rd 2024, 1:50 pm
image

Advertisement

இலங்கையின் புதிய நிறைவேற்று ஜனாதிபதியுடனான புதிய பயணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில்,

இலங்கையின் பிரஜைகளை எதிர்கால உலகிற்கு இட்டுச் செல்லும் புதிய விமானியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டின் 9 வது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றமை நாடு முழுவதும் உள்ள மக்கள் அமைதியான முறையில் தமது வாக்குகளைப் பயன்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட மாற்றமாகும் என்பது எனது அவதானிப்பு. 

எந்தவொரு தீவிரமான தேர்தல் வன்முறைச் செயற்பாடுகளும் இன்றி இவ்வாறானதொரு முடிவைப் பெற்றமைக்கான கௌரவம் நிச்சயமாக வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாக அனுபவிக்கத் தீர்மானித்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

அதே போல் தேர்தல் ஆணையம், ஆயுதப்படைகள், பாதுகாப்புத் துறையின் உண்மையான வெற்றியாகும். 

அனுரகுமார திஸாநாயக்க மீதான இந்த மக்கள் நம்பிக்கை ஒரே இரவில் தோன்றியதல்ல, அது பாராளுமன்ற ஜனநாயகத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டதன் விளைவு என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

அவர் முன்னால் இப்போது எளிதான சவால் எதுவும் இல்லை. நமது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பின் மாறுபாட்டை உணர்ந்துகொண்டு, உலகளாவிய புவிசார் அரசியல் போக்குகளுடன் மோதாமல் இந்த நீண்ட பயணத்தை அவர் நிலையானதாக மேற்கொள்ள வேண்டும். 

அதற்கு அவருக்கு போதுமான அரசியல் விருப்பம் இருப்பதாக நான் நம்புகிறேன்.

புதிய நிறைவேற்று ஜனாதிபதியுடனான புதிய பயணத்திற்கு இலங்கை வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அவர்  வெளியிட்ட வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுர மீதான மக்கள் நம்பிக்கை ஒரே இரவில் தோன்றவில்லை- வாழ்த்துச் செய்தியில் சபாநாயகர் சுட்டிக்காட்டு. இலங்கையின் புதிய நிறைவேற்று ஜனாதிபதியுடனான புதிய பயணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.சபாநாயகர் தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.குறித்த வாழ்த்துச் செய்தியில்,இலங்கையின் பிரஜைகளை எதிர்கால உலகிற்கு இட்டுச் செல்லும் புதிய விமானியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.நாட்டின் 9 வது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றமை நாடு முழுவதும் உள்ள மக்கள் அமைதியான முறையில் தமது வாக்குகளைப் பயன்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட மாற்றமாகும் என்பது எனது அவதானிப்பு. எந்தவொரு தீவிரமான தேர்தல் வன்முறைச் செயற்பாடுகளும் இன்றி இவ்வாறானதொரு முடிவைப் பெற்றமைக்கான கௌரவம் நிச்சயமாக வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாக அனுபவிக்கத் தீர்மானித்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.அதே போல் தேர்தல் ஆணையம், ஆயுதப்படைகள், பாதுகாப்புத் துறையின் உண்மையான வெற்றியாகும். அனுரகுமார திஸாநாயக்க மீதான இந்த மக்கள் நம்பிக்கை ஒரே இரவில் தோன்றியதல்ல, அது பாராளுமன்ற ஜனநாயகத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டதன் விளைவு என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.அவர் முன்னால் இப்போது எளிதான சவால் எதுவும் இல்லை. நமது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பின் மாறுபாட்டை உணர்ந்துகொண்டு, உலகளாவிய புவிசார் அரசியல் போக்குகளுடன் மோதாமல் இந்த நீண்ட பயணத்தை அவர் நிலையானதாக மேற்கொள்ள வேண்டும். அதற்கு அவருக்கு போதுமான அரசியல் விருப்பம் இருப்பதாக நான் நம்புகிறேன்.புதிய நிறைவேற்று ஜனாதிபதியுடனான புதிய பயணத்திற்கு இலங்கை வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அவர்  வெளியிட்ட வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement