• Feb 12 2025

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டம்..!

Sharmi / Feb 12th 2025, 10:22 am
image

யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாகக் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என வலியுறுத்தி நேற்றையதினம் மாலை தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக ஆரம்பமான கவனயீர்ப்புப் போராட்டம் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டம் பௌர்ணமி தினமாகிய இன்றையதினம் மாலை 6 மணி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள், தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரையும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு தையிட்டி விகாரை காணி உரிமையாளர்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்தப் போராட்டத்துக்கு பல கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளது.

அதேவேளை போராட்டக்காரர்கள் கறுப்புக் கொடியை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதேவேளை குறித்த பகுதியில் ஏராளமான பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.




தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டம். யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாகக் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என வலியுறுத்தி நேற்றையதினம் மாலை தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக ஆரம்பமான கவனயீர்ப்புப் போராட்டம் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.குறித்த போராட்டம் பௌர்ணமி தினமாகிய இன்றையதினம் மாலை 6 மணி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் மக்கள், தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரையும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு தையிட்டி விகாரை காணி உரிமையாளர்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்தப் போராட்டத்துக்கு பல கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளது.அதேவேளை போராட்டக்காரர்கள் கறுப்புக் கொடியை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை குறித்த பகுதியில் ஏராளமான பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement