• May 09 2024

திருமலையில் இடம்பெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி...!

Sharmi / Mar 12th 2024, 1:00 pm
image

Advertisement

மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி, நேற்றையதினம்(11)   தி/ இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில்  நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாரச்சி  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  தம்பலகாமம், மூதூர், கிண்ணியா, கந்தளாய், பட்டினமும் சூழலும், வெருகல், கோமரன்கடவல குச்சவெளி, சேருவில பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள சகன செவன அமைப்பின் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேசத்தில் உள்ள Hope நிறுவனத்தின் மாற்றுதிறனாளிகள் பங்கு பற்றியதுடன், இயலுமையுடைய அனைத்து போட்டி நிகழ்ச்சிகளிலும்  பங்குபற்றியிருந்தனர்.

இந்நிகழ்வில், சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன்,  பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



திருமலையில் இடம்பெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி. மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி, நேற்றையதினம்(11)   தி/ இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில்  நடைபெற்றது.மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாரச்சி  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  தம்பலகாமம், மூதூர், கிண்ணியா, கந்தளாய், பட்டினமும் சூழலும், வெருகல், கோமரன்கடவல குச்சவெளி, சேருவில பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள சகன செவன அமைப்பின் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேசத்தில் உள்ள Hope நிறுவனத்தின் மாற்றுதிறனாளிகள் பங்கு பற்றியதுடன், இயலுமையுடைய அனைத்து போட்டி நிகழ்ச்சிகளிலும்  பங்குபற்றியிருந்தனர்.இந்நிகழ்வில், சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன்,  பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement