வீடு ஒன்றினுள் புகுந்த கரப்பான் பூச்சியை கொல்ல நபர் ஒருவர் முயன்றபோது வீடு ஒன்று தீப்பற்றியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
ஜப்பானில் உள்ள வீடு ஒன்றிலேயே அளவுக்கு அதிகமான பூச்சி கொல்லி தெளிப்பானை (Insecticide sprayer) பயன்படுத்திய போதே குறித்த வீடு தீப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த வீட்டில் வசித்த இருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.