• Feb 14 2026

ஏழு பல்கலைக்கழகங்களில் புதிய விடுதிகளை நிர்மாணிக்க திட்டம்

Chithra / Feb 13th 2026, 12:46 pm
image


நாட்டிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களில் புதிய விடுதி வசதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


பல்கலைக்கழக மாணவர்களிடையே நிலவும் தங்குமிட வசதிகளுக்கான கடும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


இந்தப் புதிய விடுதிகள் மூலம் குறைந்தது 2,400 மாணவர்கள் தங்குமிட வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கல்வி அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மாணவர்களுக்குச் சிறந்த வாழ்க்கைச் சூழலை வழங்குவதன் மூலம், அவர்களின் கல்விசார் அனுபவங்களையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான இலக்காகும்.


தற்போது பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய விடுதி வசதிகள் மாணவர்களின் தங்குமிடப் பிரச்சினைகளுக்குப் பெரும் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏழு பல்கலைக்கழகங்களில் புதிய விடுதிகளை நிர்மாணிக்க திட்டம் நாட்டிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களில் புதிய விடுதி வசதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.பல்கலைக்கழக மாணவர்களிடையே நிலவும் தங்குமிட வசதிகளுக்கான கடும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விடுதிகள் மூலம் குறைந்தது 2,400 மாணவர்கள் தங்குமிட வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.கல்வி அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மாணவர்களுக்குச் சிறந்த வாழ்க்கைச் சூழலை வழங்குவதன் மூலம், அவர்களின் கல்விசார் அனுபவங்களையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான இலக்காகும்.தற்போது பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய விடுதி வசதிகள் மாணவர்களின் தங்குமிடப் பிரச்சினைகளுக்குப் பெரும் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement