• Apr 25 2025

பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் ஹரிணி இரங்கல்

Chithra / Apr 25th 2025, 5:34 pm
image

 

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வெள்ளிக்கிழமை (25) கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து  மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்தார்.

இதன்போது இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு, கத்தோலிக்க சமூகத்தின் ஆன்மீகத் தலைவரான திருத்தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க சமூகத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்தின் அப்போஸ்தலிக் பிரதிநிதி மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் ஹரிணி இரங்கல்  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வெள்ளிக்கிழமை (25) கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து  மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்தார்.இதன்போது இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு, கத்தோலிக்க சமூகத்தின் ஆன்மீகத் தலைவரான திருத்தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க சமூகத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்தின் அப்போஸ்தலிக் பிரதிநிதி மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement