• Sep 20 2024

வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி பணம் பறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!

Chithra / Sep 18th 2024, 12:23 pm
image

Advertisement


கொழும்பு 15 இல் உள்ள குடியிருப்பு ஒன்றிற்குள் நுழைந்து அதில் வசிப்பவர்களை அச்சுறுத்தி பெருந்தொகை பணத்தை கப்பம் பெற்ற  நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1.4 மில்லியன் ரூபாவை கப்பம் பெற்ற குற்றச்சாட்டிலேயே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜன்ட் ஒருவரும், 

கொழும்பு வடக்கு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையினை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி பணம் பறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது கொழும்பு 15 இல் உள்ள குடியிருப்பு ஒன்றிற்குள் நுழைந்து அதில் வசிப்பவர்களை அச்சுறுத்தி பெருந்தொகை பணத்தை கப்பம் பெற்ற  நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.1.4 மில்லியன் ரூபாவை கப்பம் பெற்ற குற்றச்சாட்டிலேயே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜன்ட் ஒருவரும், கொழும்பு வடக்கு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.இது தொடர்பான மேலதிக விசாரணையினை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement