• May 22 2024

இலங்கை மக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு..! அறிமுகமான அவசர தொலைபேசி இலக்கம்..!

Chithra / Jan 2nd 2024, 4:17 pm
image

Advertisement

 

தற்போது நடைபெறும் விசேட சோதனை நடவடிக்கைக்கு தகவல்களை வழங்குவதற்காக இன்று அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோன் தலைமையில், குறித்த அவசர இலக்கம் பொலிஸ் தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

071 859 88 00 என்பதே குறித்த அவசர தொலைபேசி இலக்கமாகும்.

இந்த தொலைபேசி இலக்கத்துடன் கூடிய ஸ்டிக்கர் இன்று முதல் முச்சக்கர வண்டிகளில் ஒட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் 'யுக்திய' பொலிஸ் நடவடிக்கையின் கீழ் நேற்று  முதல் இன்று (02) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, ​​273 கிராம் ஹெரோயின், 111 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 426 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை மக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு. அறிமுகமான அவசர தொலைபேசி இலக்கம்.  தற்போது நடைபெறும் விசேட சோதனை நடவடிக்கைக்கு தகவல்களை வழங்குவதற்காக இன்று அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோன் தலைமையில், குறித்த அவசர இலக்கம் பொலிஸ் தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.071 859 88 00 என்பதே குறித்த அவசர தொலைபேசி இலக்கமாகும்.இந்த தொலைபேசி இலக்கத்துடன் கூடிய ஸ்டிக்கர் இன்று முதல் முச்சக்கர வண்டிகளில் ஒட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை நாடளாவிய ரீதியில் 'யுக்திய' பொலிஸ் நடவடிக்கையின் கீழ் நேற்று  முதல் இன்று (02) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது, ​​273 கிராம் ஹெரோயின், 111 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 426 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement