தற்போது நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் அரசியல் தலையீடுகள் மருந்துக் கொள்வனவு நடவடிக்கையை நேரடியாகப் பாதித்துள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் மனோஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டில் மருந்துகளுக்கான தட்டுப்பாடு மற்றும் தரம் குறைந்த மருந்துகள் இல்லை எனவும் விசேட வைத்திய நிபுணர் மனோஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அவரது இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,
நாட்டில் மருந்து மாபியா ஒன்று இயங்கி வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசியல் தலையீடுகளால் மருந்து கொள்வனவு நடவடிக்கை பாதிப்பு தற்போது நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் அரசியல் தலையீடுகள் மருந்துக் கொள்வனவு நடவடிக்கையை நேரடியாகப் பாதித்துள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் மனோஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாட்டில் மருந்துகளுக்கான தட்டுப்பாடு மற்றும் தரம் குறைந்த மருந்துகள் இல்லை எனவும் விசேட வைத்திய நிபுணர் மனோஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார்.அவரது இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,நாட்டில் மருந்து மாபியா ஒன்று இயங்கி வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.