• Jun 06 2025

உரும்பிராயில் பொன்.சிவகுமாரனின் நினைவுதினம் அனுஷ்டிப்பு..!

shanuja / Jun 5th 2025, 4:44 pm
image


தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 51 ஆவது நினைவுதினம் இன்று (05) வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 


யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவு தூபியில்  நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. 


இதன்போது சுடர் ஏற்றப்பட்டு, பொன் சிவகுமாரனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.


நினைவுதின நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொன் சிவகுமாரனின் சகோதரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். 



உரும்பிராயில் பொன்.சிவகுமாரனின் நினைவுதினம் அனுஷ்டிப்பு. தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 51 ஆவது நினைவுதினம் இன்று (05) வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவு தூபியில்  நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது சுடர் ஏற்றப்பட்டு, பொன் சிவகுமாரனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.நினைவுதின நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொன் சிவகுமாரனின் சகோதரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement