• Jun 11 2026

இலங்கையில் 5 வயதுக்குட்பட்டோரில் மோசமான ஊட்டச்சத்து நிலை: ஊவா முன்னிலை

Chithra / Jun 11th 2026, 12:00 pm
image

இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடையே மந்த போசணை மிக அதிகமாகக் காணப்படும் மாகாணம் ஊவா மாகாணம் என்று பதுளை போதனா வைத்தியசாலையின் ஊட்டச்சத்து விசேட வைத்தியர் வாசனா மாரசிங்க தெரிவித்துள்ளார். 


நேற்று (10) போசணையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வுப் பேரணிக்கு இணையாக பதுளை போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற விழிப்புணர்வுத் திட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைப் பகிர்ந்து கொண்டார். 


இதேவேளை, இந்த மாகாணத்தில் மந்த போசணை மட்டுமன்றி, அதிபோசணை (Overnutrition) அதாவது தேவையற்ற முறையில் உடல் எடை அதிகரித்தல் என்ற நிலையும் அதிகமாகக் காணப்படுவதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். 


 பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் சரியான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த போதிய அறிவு அல்லது விழிப்புணர்வு இல்லாமையே இந்த நிலைமைக்குக் காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 5 வயதுக்குட்பட்டோரில் மோசமான ஊட்டச்சத்து நிலை: ஊவா முன்னிலை இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடையே மந்த போசணை மிக அதிகமாகக் காணப்படும் மாகாணம் ஊவா மாகாணம் என்று பதுளை போதனா வைத்தியசாலையின் ஊட்டச்சத்து விசேட வைத்தியர் வாசனா மாரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (10) போசணையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வுப் பேரணிக்கு இணையாக பதுளை போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற விழிப்புணர்வுத் திட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைப் பகிர்ந்து கொண்டார். இதேவேளை, இந்த மாகாணத்தில் மந்த போசணை மட்டுமன்றி, அதிபோசணை (Overnutrition) அதாவது தேவையற்ற முறையில் உடல் எடை அதிகரித்தல் என்ற நிலையும் அதிகமாகக் காணப்படுவதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.  பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் சரியான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த போதிய அறிவு அல்லது விழிப்புணர்வு இல்லாமையே இந்த நிலைமைக்குக் காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement