• Sep 08 2024

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் தரமற்ற உணவு..! – எம்.பி.க்கள் புகார்

Chithra / May 20th 2024, 1:30 pm
image

Advertisement

 

நாடாளுமன்றத்தின் சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த 10ஆம் திகதி நடந்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இப்புகாரைத் தெரிவித்தனர். 

மேலும், கட்டணம் வசூலிக்கப்படும் தொகைக்கு அல்லது போதுமான அளவு உணவை உண்ணக்கூடிய வகையில் வழங்கவும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, சுமார் இருபது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் சிறிது காலமாக உணவு உண்பதைத் தவிர்த்து வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, உணவு மற்றும் பானங்களுக்காக வருடாந்தம் சுமார் பன்னிரெண்டு கோடி ரூபாவை நாடாளுமன்றம் செலவிடுவதாக நாடாளுமன்ற நிதி அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். 

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் தரமற்ற உணவு. – எம்.பி.க்கள் புகார்  நாடாளுமன்றத்தின் சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளதாக தெரியவருகின்றது.கடந்த 10ஆம் திகதி நடந்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இப்புகாரைத் தெரிவித்தனர். மேலும், கட்டணம் வசூலிக்கப்படும் தொகைக்கு அல்லது போதுமான அளவு உணவை உண்ணக்கூடிய வகையில் வழங்கவும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேவேளை, சுமார் இருபது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் சிறிது காலமாக உணவு உண்பதைத் தவிர்த்து வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, உணவு மற்றும் பானங்களுக்காக வருடாந்தம் சுமார் பன்னிரெண்டு கோடி ரூபாவை நாடாளுமன்றம் செலவிடுவதாக நாடாளுமன்ற நிதி அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement