• Oct 18 2024

தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது....! நாமல் சுட்டிக்காட்டு...!

Sharmi / May 29th 2024, 9:02 am
image

Advertisement

தேர்தலை ஒத்திவைப்பது எந்தவொரு ஜனநாயகத்திற்கும் பொருந்தாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நெலும் மாவத்தையில் நேற்றையதினம்(28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர்  ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நீடிப்பதனால் ஜனநாயக நாட்டின் அடிப்படைக் கொள்கைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த போது உரிய நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டதாகவும் தேர்தல்கள் எந்த வகையிலும் பிற்போடப்படவில்லை.

ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மை என்பது மக்களின் விருப்பத்தினாலேயே ஏற்பட வேண்டுமே தவிர அவர்களின் குரலை தாமதிப்பதன் மூலம் அல்ல எனவும் நாமல் ராஜபக்ச பதிலளித்துள்ளார்.



தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. நாமல் சுட்டிக்காட்டு. தேர்தலை ஒத்திவைப்பது எந்தவொரு ஜனநாயகத்திற்கும் பொருந்தாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நெலும் மாவத்தையில் நேற்றையதினம்(28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர்  ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நீடிப்பதனால் ஜனநாயக நாட்டின் அடிப்படைக் கொள்கைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த போது உரிய நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டதாகவும் தேர்தல்கள் எந்த வகையிலும் பிற்போடப்படவில்லை.ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மை என்பது மக்களின் விருப்பத்தினாலேயே ஏற்பட வேண்டுமே தவிர அவர்களின் குரலை தாமதிப்பதன் மூலம் அல்ல எனவும் நாமல் ராஜபக்ச பதிலளித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement